1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 6 ஜனவரி 2015 (21:38 IST)

ரஞ்சிப் போட்டி கிரிக்கெட்டில் சேவாக் அதிரடி சதம்

ரஞ்சிப் போட்டி கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வீரேந்திர சேவாக் சதமடித்தார்.
 
ஹரியானாவின் லாஹிலில் உள்ள பன்சிலால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும், ரஞ்சிப் போட்டி கிரிக்கெட் தொடர் ஹரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் 147 ரன்கள் எடுத்துள்ளார்.
 

 
டாஸ் வென்ற ஹரியானா அணி பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி டெல்லி அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து  விளையாடிக் கொண்டிருந்தது.
 
அப்போது களம் இறங்கிய ஷேவாக் அதிரடியாக விளையாடி சதமடித்தார். 178 பந்துக்களைச் சந்தித்த சேவாக் 17 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 147 ரன்கள் குவித்தார்.
 
உலகக் கோப்பை போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறும் இந்நேரத்தில், ரஞ்சிப் போட்டியில் வீரேந்திர சேவாக் அதிரடியாக அடுத்தடுத்து சதமடித்து அசத்தியுள்ளார்.
 
கடந்த வாரம் பேரோஸ் கான் கோட்லா மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 105 ஓட்டங்களை ஷேவாக் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.