1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 18 ஜூன் 2016 (13:28 IST)

ரூ. 34 கோடிக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் கோலி

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி மும்பையில் ரூ. 34 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க உள்ளார்.
 

 
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் சச்சின் அடைந்த உச்சத்தை விராட் கோலி அடைவார் என்று கிரிக்கெட் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், மும்பையின் வோர்லி பகுதியில் 7,171 சதுர அடி பரப்பளவில் 35ஆவது மாடியில் சுமார் ரூ 34 கோடியில் குடியிருப்பை ஒன்றை வாங்க உள்ளார்.
 
இதில் மற்றொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதே குடியிருப்பில் 29ஆவது மாடியில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் உள்ளார்.
 
குடியிருப்பை வாங்குவது குறித்து கடந்த சில மாதங்களாகவே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால், தற்போதைகு அங்கு இடமில்லாததால் வரும் 2018ஆம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியில் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.