ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (14:13 IST)

எங்கள் தாய் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம்... விராட் கோலி சகோதரரின் பதிவு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் விராட் கோலி விலகி உள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் கோலி விலகியதற்குக் காரணம் அவரின் தாயார் சரோஜ் கோலியின் உடல்நலக் குறைவுதான் காரணம் என சொல்லப்படுகிறது. கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தன் தாயார் கூட இருக்க விரும்பும் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக தற்போதைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆனால் இது சம்மந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, இதுபற்றி பேசியுள்ளார். அதில் “எல்லோருக்கும் வணக்கம், என்னுடைய தாயாரின் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகள் பற்றி  எனக்கு தெரிய வந்தது. என்னுடைய தாயார் நலமாக இருக்கிறார். ஊடகங்கள் உள்பட அனைவருக்கும் என் தாய் பற்றி எந்த வதந்தியைப் பரப்பவேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.