தொடர்புடைய செய்திகள்
- இன்று நிறைவு பெறுகிறது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள். அமைச்சர் உதயநிதி பங்கேற்பு..!
- மார்ச் 18 ஆம் தேதி MDS படிப்பிற்கான நீட் தேர்வு!
- முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி
- 2023ல் மட்டும் 50 லட்சம் கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த இந்தியர்கள்..!
- ''தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்''- ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
ஜடேஜாவை அவசர அவசரமாக NCA-க்கு அனுப்பிய பிசிசிஐ!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 28 ரன்களில் தோற்று அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் விசாகப்பட்டணத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு அவருக்கு பதில் சௌரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இப்போது ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து எப்படியாவது அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வைக்க வேண்டுமென்று பிசிசிஐ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.