1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Team India won the second match in delhi

இரண்டாவது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

India
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த தொடரின் இரண்டாவது பொட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி பே 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் இருவரும் அபார அரைசதம்  முறையே 74 மற்றும் 53 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து ஆடிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் மட்டுமே சேர்த்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் நிதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
எல்லாப் புகழும் கம்பீருக்கே… ஆட்டநாயகன் நிதீஷ்குமார் நெகிழ்ச்சி!