ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:24 IST)

ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்

டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நடந்து முடிந்த டி 20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் போட்டிகளிலும் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.

இதன்  மூலம் பேட்ஸ்மேன்களுக்கான டி 20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் விராட் கோலிக்குப் பிறகு நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வீரராக சூர்யகுமார் யாதவ் உருவாகியுள்ளார்.