1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (22:38 IST)

டி-20 சிறந்த வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் , மந்தனா பரிந்துரை!

virat surya
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் யாதவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருபவர்  சூர்யகுமார் யாதவ். இவர் நடப்பு ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஆண்டில் மட்டும் ,68 சிக்சர்கள் இரண்டு சதங்கள், 9 அரை சதங்களுடன் இவர் 1000 ரன்களுக்கு மேல்  எடுத்து, 187.43 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

எனவே, இந்த ஆண்டின் சிறந்த ஐசிசி டி-20 வீரருக்கான விருதுக்கு சூர்யகுமார் யாதவ்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல்,  டி-20 ஐசிசி மகளிர் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த டி-20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.