தொடர்புடைய செய்திகள்
- மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா வெற்றி
- கிரிக்கெட் ஸ்டார்களின் கையெழுத்துகளுடன் களமிறங்கும் ஓப்போ!
- கேக் வெட்டி கொண்டாட்டம்: மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்!
- 27 ரன்களில் மலேசியாவை சுருட்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
- டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் இங்கிலாந்து, திணறும் பாகிஸ்தான்
என் மகனின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்: சச்சின் பெருமிதம்!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 19 வயதுக்குள்ளான இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார்.
வரும் ஜூலை மாதம் இந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரும் இலங்கை அணியுடன் மோதவுள்ள வீரர்களில் ஒருவர்.
அர்ஜுன் தெண்டுல்கர் இடதுகை மீடியம் பேஸ் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்