1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma changed his mind about BGT series

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

ரோஹித் ஷர்மா
நியுசிலாந்து அணிக்கு எதிரான வொயிட்வாஷ் தோல்வியால் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள தொடரின் முதல் சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

அவர் குடும்பக் காரணங்களுக்காக அந்த நேரத்தில் இந்தியாவில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். முதல் போட்டியில் கேப்டன் இல்லையென்றால் அது அணிக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியிலும் இந்த தகவல் பெரியளவில் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த விமர்சனங்களு செவிகொடுத்து ரோஹித் ஷர்மா முதல் போட்டியில் இருந்தே ஆட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அனேகமாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்தான் ரோஹித் ஷர்மாவின் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என சொல்லப்படுகிறது.
About Writer
vinoth