தொடர்புடைய செய்திகள்
- தினேஷ் கார்த்திக் அதிரடி.. ஆனாலும் வெற்றிகரமான தோல்வி! – சன்ரைசர்ஸிடம் போராடி தோற்ற ஆர்சிபி!
- தன் சாதனையை தானே முறியடித்த சன்ரைசர்ஸ்..! அதிரடி சரவெடி ஆட்டம்! – டார்கெட்டை பார்த்து ஆடி போன RCB!
- நான் தோத்துட்டா என் குடும்பத்தை இழுத்து கேவலமா திட்டுவாங்க! – ஆர்சிபி ரசிகர்கள் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்!
- தோனியின் ஃபேன்பேஸ் கண்டு நெகிழ்ந்த பேட்கமின்ஸ்
- தோனியை விஞ்ச முடியும் என நான் நினைக்கவில்லை- பேட் கம்மின்ஸ்
டி 20 வரலாற்றிலேயே எந்த அணியும் படைக்காத சாதனையை படைத்த ஆர் சி பி!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டி டி 20 வரலாற்றின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இடம்பிடித்தது. இந்த டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ஆர்சிபி அணி பவர்ப்ளேவிலேயே சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த தவறியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் ட்ராவிஸ் ஹெட் 102 ரன்களும், க்ளாசன் 67 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் 287 என்ற புதிய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை சன்ரைசர்ஸ் படைத்தது. டி 20 வரலாற்றிலேயே அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சேஸிங்கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய சூழல். பவர்ப்ளே முடியும்போது 80 ரன்களை ஆர்சிபி நெருங்கியிருந்தபோது விராட்கோலி 42 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் டூ ப்ளெசிஸ் நின்று விளையாடி 28 பந்துகளுக்கு 62 ரன்கள் வரை வந்தவர் அதிர்ச்சிகரமாக விக்கெட்டை இழந்தார். அதற்கடுத்து வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று 35 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் இதுவரையிலான டி 20 போட்டி வரலாற்றில் சேஸிங் செய்யும் போது ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக சாதனையைப் படைத்துள்ளது ஆர் சி பி. மேலும் இந்த போட்டியில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி 20 போட்டிகளில் இரு அணிகளும் சேர்ந்து சேர்த்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது.