தொடர்புடைய செய்திகள்
- கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்?
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு.. பும்ரா, தாக்கூர் சாய் சுதர்சன் வெளியே… இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
- ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி… தேதி பற்றி வெளியான தகவல்!
- 73 ரன்கள் எடுத்தால் போதும்.. இன்றைய போட்டியில் புதிய சாதனை படைப்பாரா ஜோ ரூட்?
- ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்து கொண்டால் 500% வரி.. இந்தியாவை மறைமுகமாக மிரட்டிய டிரம்ப்!
நான் இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்… பும்ரா ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி ஆதங்கம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ஷுப்மன் கில் 110 ரன்களோடு களத்தில் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக 8 பேட்ஸ்மேன்களோடு விளையாடி வருகிறது.
எதிர்பார்த்தது போலவே பும்ரா அணியில் இல்லை. இது குறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி நீங்கள் உலகின் தலைசிறந்த பவுலரை வைத்துள்ளீர்கள். ஏழு நாள் ஓய்வுக்குப் பிறகும் அவரை அணியில் நீங்கள் எடுக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.