1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (09:45 IST)

அட என்னப்பா இது ரெண்டு டெஸ்ட் வச்சிகிட்டு.. இதெல்லாம் டைம் வேஸ்ட் – ரவி சாஸ்திரி!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வென்றது. இந்த போட்டி இரண்டாவது நாளிலேயே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்ற நிலையில் தொடர் சமனில் முடிந்தது. இது இரு நாட்டு ரசிகர்களுக்கும்  ஏமாற்றமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் போது வர்ணனை செய்த ரவி சாஸ்திரி ”இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பது நேரவிரயம்தான்” எனக் கூறியுள்ளார்.

இதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ரசிகர்கள் பலரும் ஆமோதித்து பேசியுள்ளனர். மேலும் குறைந்தது மூன்று போட்டிகளாவது இருந்தால்தான் டெஸ்ட் தொடரில் அணிகளின் திறமையை பரிசோதிக்க முடியும் எனவும் பலர் கூறி வருகின்றனர்.