தொடர்புடைய செய்திகள்
- புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!
- 1.02 கோடியை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
- 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை!!
- முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்த இந்தியா!
- பேட்டிங்கிலும் அசத்திய தமிழக வீரர்: டிராவை நெருங்கும் போட்டி!
மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் !
பிரிஸ்பேனில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்து உள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் ஆஸி அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல்நாளை போல மீண்டும் மழைக் குறுக்கிட்டுள்ளது. இதனால் போட்டி தொடர்ந்து நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.