தொடர்புடைய செய்திகள்
- பேன் இந்தியா படத்தை இயக்கும் ராம்கோபால் வர்மா.. அமிதாப் முதல் ஃபஹத் வரை நடிக்கும் நடிகர்கள் லிஸ்ட்!
- காந்தி கொல்லப்பட்டதை ஆர்எஸ்எஸ் கொண்டாடினார்கள்: செல்வப்பெருந்தகை
- பாகிஸ்தானின் ராணுவ மேஜர் சுட்டுக்கொலை.. நாடு முழுவதும் பதட்டம்..!
- ChatGPT, DeepSeek போல இந்தியாவுக்கு தனி AI Model ரெடி! - மத்திய அமைச்சர் கொடுத்த அடடே அப்டேட்!
- ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!
கேப்டன்கள் போட்டோஷூட் நிகழ்ச்சியையே ரத்து செய்த ஐசிசி… எல்லாத்துக்கும் காரணம் பிசிசிஐ தானா?
அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.
இதையடுத்து இந்திய அணி ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐசிசி தலையீட்டால் பாகிஸ்தான் பெயரைப் பொறிக்க பிசிசிஐ ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் தொடர் தொடங்கும் முன் நடக்க இருந்த கேப்டன்கள் போட்டோஷூட்டுக்கு இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவை அனுப்ப முடியாது என பிசிசிஐ பிடிவாதமாக இருந்தது. அதனால் இப்போது அந்த போட்டோஷூட் நிகழ்வையே ஐசிசி ரத்து செய்துவிட்டது. தொடக்கவிழா மற்றும் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னர் நடக்கவுள்ளது.
அடுத்த கட்டுரையில்