தொடர்புடைய செய்திகள்
- ஷேன் வார்னின் இறுதி சடங்கில் கலந்துகொள்வேனா? ஆஸ்திரேலிய வீரர் அளித்த பதில்!
- தவறுதலா தாக்கிடுச்சு... ஏவுகணை குறித்து இந்தியா விளக்கம்!
- ”உங்க ஏவுகணை எங்க நாட்டை தாக்கிடுச்சு” – இந்தியா மீது பாகிஸ்தான் பரபரப்பு புகார்!
- உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா மோதல்
- இந்தியா பாகிஸ்தான் தொடரை நடத்த விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரியம் ஆசை!
பாகிஸ்தானில் ஆஸி வீரர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு… இணையத்தில் பரவும் ட்ரோல்கள்!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி இப்போது அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அங்கு செல்லும் ஆஸி அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இப்போது ஆஸி கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவரான மார்னஸ் லபுஷான் பகிர்ந்த ஒரு புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று பல கிரிக்கெட் ரசிகர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் படி அமைந்துள்ளது. லபுஷான் அந்த டிவீட்டில் தாலும் ரொட்டியும் மதிய உணவாக… அருமை எனப் பகிர்ந்து இருந்தார். அந்த டிவீட்டுக்குக் கீழ் கமண்ட் செய்யும் ரசிகர்கள் சிறைவாசிகளுக்குக் கூட இதைவிட நல்ல உணவுக் கிடைக்கும். பாகிஸ்தானுக்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு இப்படிதான் உணவளிப்பீர்களா எனக் கோபமாக வினா எழுப்பி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்