ஒரு சூறாவளி கிளம்பியதே… பயிற்சியில் பந்துவீசி கலக்கிய கோலி!
கடந்த 10 ஆண்டுகளில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் விராட் கோலி. தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியா அடுத்து இங்கிலாந்து அணியை லக்னோவில் வரும் ஞாயிற்றுக் கிழமை மோத உள்ளது. இதற்காக இந்திய அணி லக்னோ மைதானத்தில் இப்போது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
நேற்று வலைப்பயிற்சியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தீவிரமாக பந்துவீசியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் கோலி பந்துவீச வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.