1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (21:29 IST)

ஐபிஎல்-2022 ; பெங்களூர் அணிக்கு 145 ரன் கள் வெற்றி இலக்கு !

bangalore- rajasthan
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வரும் நிலையில்  இன்று பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற டுபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி  முதலில் பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 8 ரன்களும், படிக்கல் 7 ரன்களும்,, அஸ்வின் 17ரன்களும், சாம்சன் 27 ரன்களும், மிட்சல் 16 ரன்களும், பராக் 56 ரன்களும்,அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து, பெங்களூர் அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளளது.

பெங்களூர் அணி சார்பில்,சிராஜ், ஹஸ்வுட் மற்றும் ஹரங்கா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.