1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (13:33 IST)

இந்திய அணி வீரர்களுக்கு ஒரு மாதம் தொடர் ஓய்வு… திடீரென்று தள்ளிப் போன தொடர்!

இந்திய அணி வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது கூட ஐபிஎல் முடிந்த உடனே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு சென்றுள்ளார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் உள்ளன. இந்த போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கிறது.

டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தானோடு ஒரு தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு ஜூலை 11 ஆம் தேதிவரை வேறு எந்த தொடர்களும் இல்லாமல் ஓய்வு கிடைத்துள்ளது.