தொடர்புடைய செய்திகள்
- பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி! – கிரிக்கெட் வீரர் சேவாக்!
- டெஸ்ட் தொடரில் ஓய்வு பெறும் டேவிட் வார்னர்? – ரசிகர்கள் அதிர்ச்சி!
- காதலியை மணந்தார் சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்.. ரசிகர்கள் வாழ்த்து..!
- இந்திய அணிக்கு மூன்று வடிவ போட்டிகளுக்கும் புதிய ஜெர்ஸி அறிமுகம்… என்ன ஸ்பான்சர் பேரே இல்ல!
- டெஸ் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் சேர்த்து சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும்.. அக்தர் கணிப்பு!
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த போட்டித் தொடரின் இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத அதிக வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இதை அவர் தனது யுடியூப் சேனலில் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் அவர் கிரிக்கெட் விவாதங்களில் கலந்துகொண்டு வருகிறார்.