1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (07:27 IST)

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அமைந்தது.

இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக்கியதும் ரசிகர்களுக்கு அவர் மேல் கோபம் வர காரணமாக அமைந்தது. ஆனால் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன்னை வெறுத்தவர்களை கூட நேசிக்க வைத்துவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி உடனான கலந்துரையாடலின் போது பேசிய அவர் “கடந்த 6 மாதங்களாக என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தேன். சொந்த நாட்டு மக்களே என்னை வெறுத்தார்கள். அவர்களுக்கு என் விளையாட்டின் மூலமாக பதில் சொல்லவேண்டும் என நினைத்தேன். அதற்காக உழைக்கவேண்டும் என்றும், வலிமையாக இருக்கவேண்டும் எனவும் நினைத்தேன்.” எனக் கூறியுள்ளார்.