வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2016 (18:43 IST)

புணே அணிக்கு போன தோனி, கூடவே போகும் பிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பிளமிங், சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை அடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் பிளமிங் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புணே அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


 
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சூதாட்ட புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டு, அந்த இரண்டு அணிகளுக்கும் பதிலாக புணே, ராஜ்கோட் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
 
இதனையடுத்து சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் ஏலம் விடப்பட்டு, புணே, ராஜ்கோட் அணிகள் அவர்களை ஏலத்தில் எடுத்தன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி, அஸ்வின் உள்ளிட்ட 5 வீரர்கள் புணே அணிக்கு ஆட ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளமிங், சென்னை அணியின் கேபடனாக இருந்த தோனி இடம்பெற்றுள்ள புணெ அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.