செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 12 மே 2021 (00:22 IST)

இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை கொரோனாவால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

தற்போது, ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் பியூவ் சாவ்லாவின் தந்தை கொரொனாவால் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பியூவ் சால்வா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவருக்கு சக வீரர்களும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.