வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (08:43 IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு கொரோனா உயிரிழப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்காக 48 ஒருநாள் போட்டிகள், 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வீராஙகனை வேதா கிருஷ்ணமூர்த்தி. சில தினங்களுக்கு முன்னர்தான் அவரின் தாயார் செலுவம்மா தேவி கொரோனாவால் பாதிகப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரின் மூத்த சகோதரி வத்சலா சிவக்குமாரும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து அவரது குடும்பத்தில் நடந்த இரு மரணங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரிவில் இருந்து அவர் மீண்டு வர ரசிகர்கள் நம்பிக்கை கூறி வருகின்றனர்.