1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ashwin did not credit for what he done says devilliers

அஸ்வினுக்கு இந்திய அணியில் உரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை… ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்து ஜாம்பவான் அஸ்வின் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் 8 ஆவது பவுலராகவும், இந்திய அளவில் இரண்டாவது பவுலராகவும் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் “அஸ்வின் ஒரு மிகச்சிறந்த வீரர். இந்திய அணியில் பங்காற்றியதற்கு உரிய அங்கிகாரத்தைப் பெறவில்லை. ” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் “அஸ்வின் இந்திய அணிக்கே கேப்டனாகி இருக்க வேண்டியவர்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.