தொடர்புடைய செய்திகள்
- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விக நிகழ்ச்சிகளுக்கு தடை- பேரிடர் ஆணையம்
- டிசம்பர் 24ஆம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு
- புதுச்சேரி கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி
- கொண்டாட்டங்களை தள்ளிப்போடுங்கள்: WHO பரிந்துரை!
- கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுங்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து கொண்டாட்டம் !!
இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் அங்கு இடம் பெற்றிருக்கும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் இல்லங்கள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதை அப்படி நம் கண்முன் கொண்டுவரும் வகையில் தத்ரூபமான மனித உருவங்கள், தொழுவத்தின் வடிவம் போன்றவை அழகுற அமைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் இல்லங்கள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதை அப்படி நம் கண்முன் கொண்டுவரும் வகையில் தத்ரூபமான மனித உருவங்கள், தொழுவத்தின் வடிவம் போன்றவை அழகுற அமைக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
