ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 ஏப்ரல் 2021 (13:56 IST)

சேலம்: சிறு கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா - எப்படி?

சேலம் மாவட்டத்தில் கொரொனா பாதிப்பின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தினசரி பாதிக்கப்படுபவர்களின்எண்ணிக்கை15 மடங்கு அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 மட்டுமே. ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கைமட்டும்456.

ஓராண்டுக்குள் கொரோனா பாதிப்பு என்பது ஒரு நாளில் 15 மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 39,873. இதில் குணமடைந்தவர்கள் 35,837 பேர். இதுவரை500 பேர் உயிரிழந்துள்ளனர். 3536 பேர் சிகிச்சைதற்போது பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் வரை தினசரி பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழே இருந்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.

அக்டோபர் மாதத்தில் புதிய கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. அதன்பின்பு, நவம்பர் மாதத்தில் புதியதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கு கீழே குறைந்தது.

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது மாவட்ட எல்லையில் காவல்துறை சோதனைச்சாவடி அமைத்துப் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குறிப்பாகச் சென்னையிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

ரயில் நிலையங்களில் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சோதனைச்சாவடிகளும் இல்லை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை எதுவும் செய்யப்படுவதில்லை. இதனால், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஊரடங்கு அறிவித்தபின்பு அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களால் சேலம் மாவட்டத்தின் கிராமப்பகுதியிலும் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

கடந்த ஆண்டு ஊரகப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்லும்போது கொரோனா பரிசோதனை செய்துவந்தனர். இப்போது ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குச் செல்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர்.

பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதால் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் செல்கின்றனர். சமூக இடைவெளி என்பது பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

கொரோனா தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் அதிகளவில் அரசு மருத்துவமனையே நாடுகின்றனர். தடுப்பூசி அறிமுகப்படுத்தியபின்பு தற்போது தனியார் மருத்துவமனையை நாடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை சேலம்மாவட்டத்தில்மருத்துவமனையில் இடமில்லை, ஆக்சிஜன் இல்லை என்பது போன்ற பிரச்னைகள் எதுவும் எழவில்லை.