1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:00 IST)

ஜப்பானில் தீ விபத்து: 27 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஜப்பானின் ஒசாகா நகரில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தீ விபத்து வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட ஒன்றா எனபோலீசார்விசாரித்து வருவதாகத்தேசிய தொலைக்காட்சியான என்ஹெச்கே தெரிவித்துள்ளது.
 
தீ விபத்து ஏற்பட்டவுடன் அவசர சேவைக்கு உடனடியாக தகவல் சொல்லப்பட்டது.
 
தீப்பிடித்த இடம் கரும்புகையால் சூழ்ந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்ததாக என்ஹெச்கே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
 
பெண் ஒருவர் உதவி கோரி கூக்குரல் இட்டதாக சம்பவத்தை பார்த்த மற்றொரு நபர் தெரிவித்துள்ளார்.
 
தீயணைப்பு வீரர்களால்கட்டடத்தில் இருந்தவர்கள் ஏணியை கொண்டு மீட்கப்பட்டனர்.
 
தீ விபத்து ஏற்பட்டு அரை மணி நேரத்தில் அணைக்கப்பட்டாலும் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்குத் தீப்பற்றி எரிந்தது.