வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (09:19 IST)

பிறந்த குழந்தையை கழிவறையில் கொன்ற இளம்பெண்

பல்பொருள் அங்காடி ஒன்றில் பிறந்த குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 

புதிதாக பிறந்த குழந்தையை கொன்றுவிட்டதாக குற்றம் உறுதி செய்யப்பட்ட 29 வயதான டாஃப்னி மெக்பர்சனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கருச்சிதைவு ஏற்பட்டதால் இவ்வாறு குழந்தை இறந்து விட்டது என்று அவர் சொன்னதை நீதிமன்றம் நம்பவில்லை.

குழந்தை பிறக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே அதனை பெற்றெடுத்து, நீரில் மூழ்கடித்து கொன்று விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆனால், இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், இந்த பெண் கூறிய கூற்றுக்கு சாதகமான அறிவியல் ஆய்வின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு கருக்கலைப்பு குற்றமல்ல என்ற சட்டம் மெக்ஸிகோ நகரில் இயற்றப்பட்டாலும், மெக்ஸிகோ நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கருக்கலைப்பு இன்னும் குற்றமாகவே தொடர்கிறது.