1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. Tamilisai said about Delhi farmers protest

அய்யாக்கண்ணுவுக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது? தமிழிசை கேள்வி

Tamilisai soundararajan
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கி கடனை தள்ளுபடி செய்தல், விவசாயிகளுக்கு புதிய கடன் கொடுக்க வேண்டும், உள்பட பல்வெறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



 


இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல், புதுவை முதல்வர் உள்பட பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழிசை செளந்திரராஜன், 'டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணுவிடம் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கின்றது என்பதை கேட்டுப்பாருங்கள். டெல்லி விவசாயிகள் போராட்டம் உள்நோக்கம் கொண்டது. விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகளை வழங்குவது பாஜக மட்டுமே' என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஐடி கம்பெனிகளில் இனி பெண்களுக்கு இரவு ஷிப்ட் கிடையாது. கர்நாடக அரசு அதிரடி