1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: புதன், 24 மே 2017 (11:49 IST)

வைகோ சிறையில் இருந்தால் தேவையில்லாத செலவு - அசிங்கப்படுத்திய அரசு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


 

 
2009ம் ஆண்டில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கு பல வருடங்களாக கிடப்பில் இருந்தது. அந்நிலையில், வைகோ கடந்த ஏப்ரல் 3ம் தேதி திமன்றத்தில் தானாக சரணைடந்து வழக்கை சந்தித்தார். மேலும், தனக்கு ஜாமீனும் வேண்டாம் என மறுத்தார். எனவே, அவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.   
 
மேலும், ஏப்ரல் 17ம் தேதி 15 நாட்கள் காவல் முடிந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும், தான் ஜாமீனில் செல்ல விருப்பமில்லை என வைகோ கூறியதையடுத்து, அவரின் நீதிமன்ற காவல் ஜூலை 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.  
 
அவ்வர் சிறைக்கு சென்று 50 நாட்கள் ஆகியுள்ல  நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வைகோ சார்பில் நேற்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அப்போது வாதம் செய்த அரசு தரப்பு வக்கீல், வைகோவை சிறையில் வைத்திருப்பதால் அரசுக்கு தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எனவே, வைகோவின் சொந்த பணத்தில் அவரை ஜாமீனில் விடலாம் என வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி வைகோவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, வைகோவை தமிழக அரசு அசிங்கப்படுத்திவிட்டதாக சமூகவலைத்தளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர்.