சென்னை, அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் மற்றும் கடலோர காவல் படை அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் விரைந்து வந்து சோதனை செய்தனர். இறுதியில், இது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இந்தியப் பொருட்களுக்கு 50% சுங்க வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை அமெரிக்க ஜனநாயக கட்சி கண்டனம் செய்துள்ளது. உண்மையில் இந்த வரி சீனாவின் மீதுதான் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் டிரம்ப் இந்தியாவுக்கு வரி விதித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை டிரம்ப் நாசம் செய்துவிட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.