1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Plunges Amid US Tariff Impact

50% வரிவிதிப்புக்கு பின் முதல் நாள்.. அதள பாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை..!

India
அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு விதித்த 50% வரி நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், அதன் நேரடி தாக்கத்தை இந்திய பங்குச்சந்தை இன்று சந்தித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று விடுமுறை என்பதால், அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பிறகு பங்கு வர்த்தகம் இன்றுதான் முதல் முறையாக தொடங்கியுள்ளது.
 
இன்றைய வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், 670 புள்ளிகள் சரிந்து 80194 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி, 190 புள்ளிகள் சரிந்து 24,525 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த திடீர் சரிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களில், ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி போன்ற ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சிறிதளவு உயர்வை சந்தித்துள்ளன. மற்ற பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வர்த்தகமாகி வருகின்றன. 
 
பங்குச்சந்தையின் இந்த நிலை, வர்த்தக போரின் ஆரம்பக்கட்ட விளைவாக பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் நிலைமை சீரடையுமா அல்லது மேலும் சரிவை சந்திக்குமா என்பது குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
AI தொழில்நுட்பத்தால் வேலை இழக்கும் இளைஞர்கள்! எதிர்காலம் கேள்விக்குறி?