1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Ravichandran Ashwin Announces Sudden Retirement from IPL

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Ravichandran Ashwin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், 9 போட்டிகளில் 283 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்த நிலையில் அஸ்வின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், "ஒரு சிறப்பான நாளில் ஒரு புதிய தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய துவக்கத்தை கொண்டிருக்கும். ஐபிஎல் வீரராக எனது காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் இப்போதுதான் தொடங்கியுள்ளது," என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
அஸ்வின் எடுத்த இந்த ஓய்வு முடிவு, ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய பந்து வீச்சாளரின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!