மருத்துவர்கள் அனுமதியளித்தால் தற்கொலை செய்து கொள்ளலாம்: ஒப்புதல் அளித்த மாகாண அரசு

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (14:46 IST)
அமெரிக்கவில் ஒரு மாகாணத்தில், மருத்துவர்கள் அனுமதியுடன் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற புதிய சட்டத்திற்கு அம்மாகாண அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில், நோய் வாய்ப்பட்டவர்கள், மருத்துவர்களின் அனுமதியின்றி தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாண செனட் சபையில் அம்மாகாண அரசு வினோத சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அதாவது தீராத நோயால் தவித்து கொண்டிருக்கும் நோயாளிகள், மருத்துவர்கள் எழுதிகொடுக்கும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்கள் தற்கொலைக்கான மருந்துகளை கொடுப்பதற்கு முன்பு, நோயாளிகள் நல்ல மனநிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கருணை கொலை குறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், நியூ ஜெர்ஸியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதா பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

சிறையில் பிரியங்கா காந்தியை பார்க்க வந்த சோனியா காந்தி.. போராட்ட களத்தில் குதிக்க திட்டமா?

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..

டெங்கு பாதிப்பால் 8,963 பேர் பாதிப்பு.. 3 பேர் பலி.. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்..

Godzilla Vs Kong படத்தில் சிறுமியாக நடித்த கெய்லி ஹாட்டில் மரணம்!. ரசிகர்கள் சோகம்!...

மாசம் 20 ஆயிரம் வட்டி!.. கந்துவட்டி கொடுமை!.. மதுரையில் பெண் தற்கொலை!...

அடுத்த கட்டுரையில்
Show comments