ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2022 (16:09 IST)

வீட்டுக்கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்த பெண்: ரூ.19 லட்சம் அபராதம் விதித்த அரசு!

pink door
வீட்டுக்கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்த பெண்: ரூ.19 லட்சம் அபராதம் விதித்த அரசு!
பெண் ஒருவர் தனது வீட்டின் வெளிப்புற கதவுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததை அடுத்து அரசு அவருக்கு ரூபாய் 19 லட்சம் அபராதம் விதித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது
 
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த 45 வயது மிராண்டா டிக்ஸன் என்பவர் தனது வீட்டின் முன்பகுதி பின்க் நிற பெயிண்ட் அடித்தார். இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த வீட்டை பிரபலம் ஆக்கியதோடு, அந்த வீட்டின் முன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஸ்காட்லாந்து நாட்டின் விதிமுறையின்படி வீட்டின் முன் கதவு மங்கலான நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதால் உடனடியாக பெயிண்ட் கலரை மாற்ற வேண்டும் அல்லது இந்திய மதிப்பில் ரூபாய் 19 லட்சம் அபராதம் கட்ட நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது
 
இதனை அடுத்து அவர் தற்போது மங்கலான நிறத்தில் பெயிண்ட் அடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த புகார் முற்றிலும் தீய நோக்கம் கொண்டது என்றும் இந்த மிகச் சிறிய விஷயத்தை பெரிதாக்கி உள்ளனர் என்றும் அவர் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.,
 
Edited by Siva