Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: நியூயார்க்கில் மட்டுமே 5 பேர்!

Written By siva
Updated: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:59 IST)
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது என்பதும் இந்த வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்தியாவிலும் 5 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மொத்தம் எட்டு பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் ஐந்து பேர் நியூயார்க் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

நேபாளத்தில் 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. பெயர்கள் வெளியீடு..!

நேபாள வெள்ளம்!.. தண்ணீரில் சிக்கியவரை யானை காப்பாற்றியதா?!.. வைரல் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments