1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. noble price cant be given to anyone

டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாது!.. நோபல் கமிட்டி கறார்....

donald
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா. அரசியல்வாதி, சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர் மரியா கொரினா. வெனிசுலா நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி வருவதற்காக இவருக்கு சமீபத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெறப்பட்டது.

சமீபத்தில் அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக இவர் செயல்பட்டு வந்தார். இவரை வெனிசுலாவின் இரும்பு பெண்மணி என அழைக்கிறார்கள். ஒரு பக்கம் நான் இதுவரை உலகநாடுகளின் 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.. இதைவிட வேறென்ன தகுதி வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதையடுத்து நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நான் வழங்க ஆசைப்படுகிறேன் என மரியா கொரினா கூறினார்.இந்நிலியில். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நோபல் கமிட்டி ‘ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றவருக்கு மாற்றவோ பகிரவோ அல்லது ஒருவடமிருந்து பறிக்கவோ சட்டத்தில் இடமில்லை. எனவே, மரியா கொரினா ஆசைப்படுவது போல அவர் நோபல் பரிசை யாருக்கும் கொடுக்க முடியாது’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
டெல்லியில் நாளை சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்.. டெல்லி போலீசாரிடம் தவெக மனு...