கலவரம் எதிரொலி.. நேபாள சிறையில் இருந்து 15000 கைதிகள் தப்பியோட்டம்.. ஒரே ஒரு கைதி மட்டும் சரண்..!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரம், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது. பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், இந்த வன்முறையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கைதிகள் சிறைகளிலிருந்து தப்பி ஓடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் நடந்த கலவரத்தின் விளைவாக, 25-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார் 15,000-க்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தங்காடி பகுதியில் உள்ள ஒரு சிறையில் இருந்து மட்டும் 692 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் மட்டும் மீண்டும் சிறைக்கு வந்து சரணடைந்திருப்பது ஒரு ஆச்சரியமான நிகழ்வு. நேபாளத்தில் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு, தப்பி ஓடியவர்களுக்கு தண்டனை காலம் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் சரணடைந்ததாக கூறப்படுகிறது. அவருடைய இந்த நடவடிக்கை, புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, நல்லொழுக்கம் காரணமாக அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில் தப்பி ஓடிய 15,000-க்கும் மேற்பட்ட கைதிகளை மீண்டும் பிடிக்க, நேபாள அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Edited by Siva