சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… இந்திய தூதரகப் பணிகள் நிறுத்தம்!

போலந்து நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 12 நாட்களுக்கு இந்திய தூதரகம் தனது பணிகளை நிறுத்தியுள்ளது.

போலந்து நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். 44,912 பேர் பலியாகி உள்ளனர்.  இந்நிலையில் இப்போது போலந்து நாட்டில் இயங்கும் இந்திய தூதரகம் தனது அனைத்துப் பணிகளையும் மார்ச் 19 ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.