டோக்லாம் பகுதியில் மீண்டும் போர் பதற்றம்: 1800 சீன வீரர்கள் குவிப்பு!!

Updated: திங்கள், 11 டிசம்பர் 2017 (15:30 IST)
கடந்த ஜூன் மாதம் டோக்லாம் பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகளில் சீன ராணுவம் ஈடுபட்டது. இந்தியா - சீனா - பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடமே டோக்லாம் பகுதி.
 
டோக்லாமில் சாலை அமைத்தால், அதன் வழியாக மிக எளிதாக சீன படைகள் இந்தியாவுக்குள் நுழைந்து விட முடியும் என்ற அச்சுறுத்தல் இருந்தது. இதனால், சீன வீரர்கள் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். 
 
சில மாதங்களுக்கு நீடித்த பேச்சுவார்த்தையால் இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து சீன ராணுவம் பின் வாங்கியது. அதன் பிறகு டோக்லாம் பகுதியில் அமைதி நிலவி வந்தது. இந்நிலையில் சீன மீண்டும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. 
 
டோக்லாமை இணைக்கும் உயர்மட்ட சாலை பணியை சீனா மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த அமைப்பு இந்தியாவை நோக்கி தென்புறமாக இல்லாமல் வடக்கு நோக்கி உள்ளது. ஆனாலும், இதுவும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்தான். 
 
மேலும், சுமார் 500 மீட்டர் தொலைவில் கூடுதல் வீரர்களை சீனா இறக்கி வருகிறது. 1800 கூடுதல் வீரர்கள் வந்துள்ளனர். இதனால், இந்தியாவும் எல்லை பகுதியில் அதிக வீரர்களை அனுப்ப தயாராகியுள்ளது. இதனால் டோக்லாமில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நீட் தேர்வு போராட்டம்!.. நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ!...

போராட்டத்திற்கு ஆதரவான வீடியோவை நீக்குங்கள்.. மாணவர்களுக்கு சென்னை ஐஐடி உத்தரவா?

26 நாட்களுக்கு பின்னர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்!...

மீண்டும் 60 நாடுகளுக்கு வரி போட்ட டிரம்ப்.. இந்தியாவுக்கு எத்தனை சதவீதம்?

போராட்டம் திசைதிரும்புவதால் உண்ணாவிரதத்தை முடித்தார் வாங்சுக்.. ஆனால் காங்கிரசும் திமுகவும் போராட்டத்தை கைவிடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments