1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (22:14 IST)

இம்ரான்கான் கட்சி கொடியுடன் இருந்த நாய் சுட்டுக்கொலை

சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவில் இம்ரான்கான் பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
 
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாகிஸ்தானில் நாய் ஒன்றின்மீது இம்ரான்கான் கட்சி கொடி இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த ஒருசிலர் அந்த நாயை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த நாய் துடிதுடித்து இறந்தது.
 
45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விலங்குகள் காப்பகமும், உலக விலங்கியல் காப்பகமும் தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்பதால் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்