Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கோ: புதிதாகக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவில் இடிந்து விபத்து !

Written By Sinoj
Updated: புதன், 7 செப்டம்பர் 2022 (14:20 IST)
காங்கோவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழைக்காலத்தில் அங்குள்ள பழைய பாலம் அடிக்கடி சேதம் அடைந்த்தால், மக்களால் ஒரு பகுதியில் இருந்து  மற்றொரு பகுதிக்குச் செல்லமுடியவில்லை.

எனவே, மக்கள் ஆற்றைக் கடப்பதற்காக சமீபத்தில் அரசு சார்பில் அங்கு ஒரு புதிதாக ஒரு பாலம் கட்டப்பட்டது.  இந்தப் பாலத்தின் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு அதிகாரிகள் வந்து ரிப்பன் வெட்டிப் பாலத்தை திறந்து வைத்த அடுத்த்  நிமிடம் பாலம் இடிந்து விழுந்தது. இதில், அனைவரும் கீழே விழுந்தனர்.

யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எல்லாம் காட்டு

நீரை தேக்கிவச்சா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போய்விடுவோம்!.. டி.கே.சிவக்குமார் கோரிக்கை!...

ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்!.. டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!..

உண்மை தெரியாம தப்பா பேசுறாங்க!.. குடும்பம் பற்றி பேசும் ஜேசன் சஞ்சய்...

கர்நாடகாவில் கனமழை!.. நிரம்பும் அணைகள்!.. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுமா?..

இனிமே இளைய கலைஞர்!.. உதயநிதியை முன்னிருத்தும் திமுக!..

அடுத்த கட்டுரையில்
Show comments