சுவையான தக்காளி பிரியாணி செய்ய...!!

Written By Sasikala
Updated: சனி, 18 ஜூலை 2020 (12:48 IST)
பாஸ்மதி அரிசி - இரண்டு கப்
பெ.வெங்காயம் - மூன்று
இஞ்சி பூண்டு விழுது - கால் கப் 
பட்டை - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
கிராம்பு - மூன்று
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
ப.மிளகாய் - மூன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - அரை கப்
புதினா, கொத்தமல்லி - அரை கப் 
 

செய்முறை: 
 
தக்காளி பிரியாணி. தக்காளி வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். பாசுமதி அரிசியை கழுவி தண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு. ஏலக்காய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அதில் அரைத்து வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு  விழுதை சேர்த்து வதக்கவும்.
 
அதில் அரைத்த தக்காளி விழுது மிளகாய் தூள், பச்சை மிளகாய், தக்காளி சாஸ் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே வந்ததும் இரண்டு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 
 
அதில்  தண்ணீரை வடித்து அரிசியை சேர்க்கவும். அரிசியை சேர்த்ததும் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் பத்து நிமிடம் சிறு தீயில் வைத்து பிறகு எடுத்து பரிமாறவும். சுவையான தக்காளி பிரியாணி தயார். 

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments