தேங்காய் பால் சாதம் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
வெள்ளை பூண்டு - 20 பல் 
பச்சை மிளகாய் - 7
புதினா - 1 கட்டு 
கொத்தமல்லி - சிறிதளவு 
நெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப 
தேங்காய் பால்  - 3 கப்
 
தாளிக்க தேவையான பொருட்கள்: 
 
பட்டை, லவங்கம் - தேவையான அளவு 
கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
அன்னாசி பூ, கல் பாசி - தேவையான அளவு
செய்முறை: 
 
ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்.. பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி  கிளறவும். குக்கரை மூடி 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். சூடான சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
 
குறிப்பு: இந்த சாதாம் செய்ய தேவைப்பட்டால் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியும் சேர்த்து சமைக்கலாம். இதற்கு துணை உணவாக சிக்கன்  கிரேவி இருக்கும்.

எல்லாம் காட்டு

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments