மிகவும் டேஸ்டியான வடகறி செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
கடலை பருப்பு - 1 கப்
வர மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தனியாத் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டை - 2
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
 
முதலில் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து மிக்ஸில் போட்டும் வரமிளகாய்,சோம்பு ,மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக  அரைத்து கொள்ளவும்.
 
பின்னர் வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிய வடைகளை போட்டு பொன்னிறமாக தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 
பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வாங்கவும். அதோடு, தக்காளியை தோல் நீக்கி  மிக்ஸில் அரைத்து சேர்த்து கொள்ளவும். பின்னர் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். 2 டாப்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
 
பின்னர் செய்து வைத்துள்ள வடைகளை சிறிது சிறிதாக கட் செய்து போட்டு, 5 நிமிடம் கொதிக்க விடவும். இதனுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான வடகறி தயார்.

எல்லாம் காட்டு

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

அடுத்த கட்டுரையில்
Show comments