ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர்: பொன். மாணிக்கவேல் வேதனை

வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (09:34 IST)
சிலைகளையும் தூண்களையும் திருடி ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்பீர்ஷா வீட்டில் நேற்று திடீரென சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான ஐம்பது பேர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகள், கோவில் கல்தூண்கள், கலைச்சிற்பங்கள் சிக்கின.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.மாணிக்கவேல், 'இன்று கைப்பற்றப்பட்ட தொன்மை வாய்ந்த சிலைகள் அனைத்தும் கோவில்களில் இருந்தே திருடப்பட்டவை. சிலைகள், கல்தூண்கள் என ஒரு கோவிலையே மொட்டை போட்டுவிட்டனர். இதுவரை சிலைகளை விற்பனை செய்ய தமிழகத்தில் யாருக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சிலையும் ஒரு பெரிய     வைரத்திற்கு ஈடானது. இந்த சிலைகளை ரன்பீர்ஷா திருடவில்லை என்றாலும் இவர் யாரிடம் இருந்து இந்த சிலைகளை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவர் இந்த சிலைகளை விற்கும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவரை சாட்சிகள் கிடைத்த பின்னரே இவரை கைது செய்ய முடியும்' என்று பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments