Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Updated: செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (11:37 IST)
வருகிற மே 12 ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 24 ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 25ந் தேதி நடைபெற உள்ளது.  மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். 
 
கர்நாடகாவில் ஆளுங் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டுமென, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பிரதமர் வர வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதா? மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் விளக்கம்..

முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தீர்மானம்.. திமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக வரவேற்பு.. அதிமுக, பாமக, பாஜக எதிர்ப்பு..

அதானி வழக்கிற்காக இந்தியா பெரும் விலையை அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளது: ராகுல் காந்தி

அயோத்தி கோவில் சி.இ.ஓ பதவிக்கு தகுதி.. இந்துவாக இருக்க வேண்டும்.. சைவமாக இருக்க வேண்டும்.. மது அருந்தக்கூடாது..

அடுத்த கட்டுரையில்
Show comments