வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (15:16 IST)

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆனது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனைப் படைத்தது. இதையடுத்து வடிவேலுவோடு இணைந்து நடிக்கும், கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் மூலம் வடிவேலு சுந்தர் சி காம்பினேஷன் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்கிய நிலையில் அங்கு 30 நாட்களுக்கு மேல் நடந்தது. அதையடுத்து இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்தாண்டு இறுதியில் படம் ரிலிஸாகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் பிறமொழிகளில் ஏன் படம் இயக்கவில்லை என்ற கேள்விக்கு “எனக்குத் தமிழை தவிர வேறு எந்த மொழியையும் கோர்வையாக பேச வராது. அதனால் நான் பிறமொழிப் படங்களை இயக்கவில்லை. அதே போல எனக்கு நான் எடுத்த படங்களை ரீமேக் செய்வதும் பிடிக்காத விஷயம். அது ஒரு அலுப்பைத் தரும் விஷயம்” எனக் கூறியுள்ளார்.