புதன், 2 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (14:44 IST)

மீண்டும் குபேரா ஷூட்டிங்… இட்லி கடைக்கு லீவ் விடும் தனுஷ்!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் குபேரா படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதால், அதில் கலந்துகொள்ள தனுஷ் செல்ல உள்ளாராம். அதனால் இட்லி கடை படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.