வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:33 IST)

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா – வீட்டில் தனிமைப்படுத்தல்!

பாலிவுட் நடிகர்கள் பலர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அக்‌ஷய் குமாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கும் தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.

முன்னதாக அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை ஆல்யா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அக்‌ஷய்குமார் தற்போது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.